சுந்தரம் பைனான்ஸ் லாபம் ரூ.675 கோடி

வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.675 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 
சுந்தரம் பைனான்ஸ் லாபம் ரூ.675 கோடி


வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.675 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
2019 ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.881 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த 2018 இதே கால அளவில் வருவாய் ரூ.788 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.138 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.675 கோடியானது.
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2018-19 நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,806 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.3,398 கோடியாக இருந்தது. நிகர லாபம் ரூ.563 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,126 கோடியானது என செய்திக்குறிப்பில் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com