மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார் அறிமுகம்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 300 காரின்  புதிய மாடலை வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி300 மாடல் அறிமுக நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (வலது), நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா.
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி300 மாடல் அறிமுக நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (வலது), நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா.


மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 300 காரின்  புதிய மாடலை வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
புதிய மாடல் குறித்து நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் இரு பிரிவுகளில் இந்தப் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இவற்றில் 1. 2 லிட்டர் (பெட்ரோல்) என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் (டீசல்) என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி 300 காரின் விலை ரூ.7.90 லட்சம் முதல் ரூ.8.49 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மராúஸா, ஆல்டுரஸ் ஜி4 மாடல் கார்களையடுத்து, அடுத்த தலைமுறையினர் விரும்பும் தயாரிப்பாகப் புதிய எக்ஸ்யூவி 300 இருக்கும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.
4 மீட்டருக்கும் குறைவான பிரிவில் ஏற்கெனவே சந்தையில் உள்ள போர்டு நிறுவனத்தின் எக்கோஸ்போர்ட், மாருதி சுஸுகியின் விட்டாரா, ப்ரெஸ்ஸா, டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் ஆகிய கார்களுக்கு போட்டியாக மஹிந்திராவின் எக்ஸ்யூவி 300 விளங்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com