அசோக் லேலண்ட் லாபம் ரூ.381 கோடி

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.381 கோடி லாபம் ஈட்டியுள்ளது.


ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.381 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபியிடம் வியாழக்கிழமை அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வருவாய் ரூ.6,325 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.7,191 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும்.
நிகர லாபம் ரூ.485 கோடியிலிருந்து 21 சதவீதம் குறைந்து ரூ.381 கோடியாக இருந்தது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com