சென்னையில் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து வர்த்தகம்

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.28,832-க்கு விற்பனை செய்யப்பட்டது.  
சென்னையில் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து வர்த்தகம்


சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.28,832-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த விலையில், கடந்த 14-ஆம் தேதி சற்று குறைந்தது. அதன்பிறகு, கடந்த 15-ஆம் தேதி மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. 

இந்நிலையில், தங்கம் விலை நேற்று சற்றே குறைந்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.28,832 விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com