அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 43,057 கோடி டாலர் (ரூ.30.13 லட்சம் கோடி) என்ற புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 43,057 கோடி டாலர் (ரூ.30.13 லட்சம் கோடி) என்ற புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 162 கோடி டாலர் (ரூ.11,340 கோடி) அதிகரித்து 43,057 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இது, முன்னெப்போதும் காணப்படாத உச்சபட்ச அளவாகும். இதற்கு முந்தைய ஆகஸ்ட் 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 69 கோடி டாலர் சரிந்து 42,895 கோடி டாலராக காணப்பட்டது.
மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த இருப்பில் பெரும்பங்களிப்பைக் கொண்டுள்ள  அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 1.52 கோடி டாலர் அதிகரித்து 39,874 கோடி டாலராக இருந்தது.
தங்கத்தின் கையிருப்பு 159 கோடி டாலர் உயர்ந்து 2,675 கோடி டாலராக இருந்தது. சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் மதிப்பு 67 லட்சம் டாலர் அதிகரித்து 144 கோடி டாலராகவும்,  நாட்டின் கையிருப்பு நிலை 70 லட்சம் டாலர் உயர்ந்து 363 கோடி டாலராகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com