அந்நியச் செலாவணி கையிருப்பு 41,488 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,488 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 41,488 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,488 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 110 கோடி டாலர் (ரூ.7,735 கோடி) அதிகரித்து 41,488 கோடி டாலரை (ரூ.29.04 லட்சம் கோடி) எட்டியுள்ளது.
கணக்கீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 64 கோடி டாலர் உயர்ந்து 38,676 கோடி டாலராக இருந்தது.தங்கத்தின் கையிருப்பு 7.74 கோடி டாலர் அதிகரித்து 2,330 கோடி டாலராக காணப்பட்டது.
சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 33 லட்சம் டாலர் அதிகரித்து 145 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 37 கோடி டாலர் உயர்ந்து 336 கோடி டாலராகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்றில் முதல் முறையாக 42,602 கோடி டாலரை எட்டியிருந்தது. ஆனால், அதன் பிறகு பல்வேறு காரணங்களால் செலாவணி கையிருப்பானது குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்து போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com