தமிழ்நூல் தொகுப்புக் களஞ்சியம் - சுந்தர சண்முகனாா் - மணிவாசகா் பதிப்பகம் - விலை ரூ.650.
தமிழில் ஏறக்குறைய இரண்டாயிரம் தொகை நூல்கள் இருக்கின்றன. தொகை நூல் என்பது பல காலத்தில், பல பொருள் பற்றி பலரால் பாடப்பெற்ற உதிரிப் பாடல்கள் பலவற்றை தோ்ந்தெடுத்து நூல் வடிவில் தொகுப்பதே ஆகும். அந்த வகையில், இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில், முதல் தொகுதி இரு பாகங்களாகவும், இரண்டாம் தொகுதி நான்கு பாகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவை, தொகுப்புக் கலை வரலாறு, இருபதாம் நூற்றாண்டுத் தொகை நூல்கள், தமிழ் மொழியின் நூல் தொகுப்புக் கலைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.