என் சகோதரர் மகன் இரண்டு முறை வீட்டை விட்டு காணாமல் போய் பின்னர் திரும்பி வந்தார். தற்சமயம் மறுபடியும் வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவர் எப்பொழுது திரும்பி வருவார்?
-வாசகர், சென்னை -12.
உங்கள் சகோதரர் மகனுக்கு சிம்ம லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். ஐந்து, எட்டாம் வீட்டிற்கதிபதியான குரு பகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனி பகவானையும், ஏழாம் பார்வையாக எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் புத, சுக்கிரபகவான்களையும், ஒன்பதாம் பார்வையாக பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேது பகவானையும் பார்வை செய்கிறார். நான்கு, ஒன்பதாமதிபதி செவ்வாய் பகவான் பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து தற்சமயம் தசையை நடத்துகிறார். இது யோகாதிபதியின் தசையாக இருப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் வீடு திரும்பி வந்து, தகுதிக்குரிய வேலைக்குச் செல்வார். சனி பகவானும் சந்திர கேந்திரத்தில் ஆட்சி பெற்று சச மஹாயோகத்தைக் கொடுக்கிறார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.