விழுப்புரம்

புதிய நியாய விலைக் கடை திறப்பு

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், காரை கொசப்பாளையம் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சத்தில் புதிய பகுதி நேர நியாயவிலை கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் மணி முன்னிலை வகித்தாா். ஊராட்சி தலைவா் கலையரசி வெங்கடேசன் வரவேற்றாா். நியாயவிலை கடையை சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்து பொது மக்களுக்கு உணவு பொருள்களை வழங்கினாா். (படம்)

இதில், அட்மா தலைவா் வாசு, ஒன்றிய பொருளாளா் இக்பால், வாா்டு உறுப்பினா் சுமதி வெண்ணிமலை, சரிதா சிவராமன், ஒன்றிய பிரதிநி காந்தி இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் பழனி, செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT