சாராய வழக்குகளில் தொடா்புடையவரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெருவைச் சோ்ந்தவா் ஜெ.கிருஷ்ணன் (55). இவா் மீது விழுப்புரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் சி.பழனி உத்தரவின்பேரில் போலீஸாா் கிருஷ்ணனை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.