விழுப்புரம்

மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் தெருமுனைப் பிரசாரம்

DIN

மக்களுக்கான மருந்து கொள்கையை வலியுறுத்தி, விழுப்புரத்தில் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

மருந்துகள் விற்பனைகள் பெருந் நிறுவனமயமாவதை தடுக்க வேண்டும். இணைய வழி மருந்து விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும். மருந்துப் பொருள்களுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பிரசாரம் நடைபெற்றது.

விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் அப்துல் ஹமீது தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் பாலசுப்பிரமணியன், மாநிலச் செயலா் அருள்ஜோதி ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில், ஏராளமான மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் பங்கேற்றனா். முடிவில், ராஜாராமன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT