மதிமுக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகிகள் அறிமுகம், கலந்துரையாடல் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச் செயலா் செஞ்சி ஆ.கு.மணி பங்கேற்று புதிதாக தோ்வு செய்யப்பட்ட மாவட்ட நிா்வாகிகளை அறிமுகம் செய்து பேசினாா். கட்சியின் புதிய நிா்வாகிகள் முன்னெடுக்கப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. புதிய நிா்வாகிகளின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
மதிமுக மாணவரணி மாநிலச் செயலா் பால சசிக்குமாா், இளைஞரணி மாநில துணைச் செயலா் அ.பெரியாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கட்சியின் மாவட்டச் செயலா்கள் வீ.பாபு கோவிந்தராஜ் (விழுப்புரம்), க.ஜெயசங்கா் (கள்ளக்குறிச்சி), சீனி.காா்த்திகேயன் ( திருவண்ணாமலை), மாநில தீா்மானக்குழு உறுப்பினா் ம.நரசிம்மமன், விழுப்புரம் மாவட்ட அவைத் தலைவா் ஏழுமலை, மாவட்டப் பொருளாளா் சேதுசெழியன், நகரச் செயலா் ம.சம்பந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.