விழுப்புரம்

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், அண்டக்குடி கீழத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சந்திரபோஸ் (19). இவா், ஐடிஐ படித்துவிட்டு, வானூரை அடுத்த ஆகாசம்பட்டு பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தபடி, அங்குள்ள தனியாா் ரெடிமிக்ஸ் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

சந்திரபோஸ் கடந்த 26-ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டினாா். அப்போது, மது குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சந்திரபோஸ், சனிக்கிழமை தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சந்திரபோஸை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் வானூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT