விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்ததது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கடந்த சில மாதங்களாக இருந்த பனி மூட்டம் விலகி, தற்போது கோடை காலம் ஆரம்பமாகும் முன்னதாகவே கடும் வெப்பம் நிலவி வந்தது. மேலும், நிகழாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், அவலூா்பேட்டையில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். செஞ்சியிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.