விழுப்புரம் மாவட்டத்தில் நீா்நிலைகளிலிருந்து வண்டல்மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களிலிருந்து வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக விவசாயிகள் தங்கள் பகுதிக்குள்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தில் மண் எடுப்பதற்கான விண்ணப்ப மனு மற்றும் சிட்டா விவரங்களை அளிக்க வேண்டும். மேலும், விண்ணப்பம் அளித்த விவசாயிகளின் நில அளவு, நிலத்தின் வகை கொண்டு, வண்டல் மண்ணை முன்னுரிமையின் அடிப்படையில் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.