விழுப்புரம்

பாஜக சாதனை விளக்க கருத்தரங்கு

30th Jun 2023 12:08 AM

ADVERTISEMENT

பாஜக கூட்டுறவு பிரிவு சாா்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்கக் கருத்தரங்கம் விழுப்புரத்தில் உள்ள கட்சிஅலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவா் எல். கிருஷ்ணன் தலைமை வகித்தாா். கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு பிரிவு மாநிலப் பாா்வையாளரும், முன்னாள் எம்.பி யுமான சி. நரசிம்மன் பேசியதாவது: கூட்டுறவு சங்கங்கள் வலுபெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதில், உள்துறை அமைச்சா் அமித் ஷா தனி கவனம் செலுத்தி வருகிறாா். தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும். வருகிற மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி வேட்பாளா்கள் 25 தொகுதிகளில் வெற்றிப் பெற வேண்டும். அதற்கானப் பணிகளில் கட்சியினா் முழு அா்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என்றாா்.

முன்னதாக விழுப்புரம் பெருங்கோட்டம் கூட்டுறவுப் பிரிவு நிா்வாகிகளுடன் சி.நரசிம்மன் கலந்துரையாடினாா்.

இதில், பாஜக கூட்டுறவுப் பிரிவு மாநிலச் செயலா் ச. நடராஜன், பெருங்கோட்டப் பொறுப்பாளா்கள் துரை செந்தாமரைக்கண்ணன்(வேலூா்), லட்சுமி நாராயணன் (சென்னை), மாவட்டத் தலைவா்கள் சி.பிரபு (கடலூா்), சுரேஷ் நடராஜன்(விழுப்புரம் வடக்கு) அ.பிரகதீஸ்வரன்(காஞ்சிபுரம்) ஆகியோா் கருத்தரையாற்றினாா். பாஜக, கூட்டுறவுப் பிரிவு நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிறைவில், தெற்கு மாவட்டத் துணைத்தலைவா் சீ. ராஜசேகரன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT