விழுப்புரம்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில்ரூ.4.86 கோடிக்குத் தீா்வு

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.4.86 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், அதன் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஆா்.பூா்ணிமா தலைமையில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மட்டுமன்றி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை, செஞ்சி, சங்கராபுரம், திருக்கோவிலூா், வானூா், விக்கிரவாண்டி ஆகிய நீதிமன்றங்களிலும் 16 அம ா்வுகளாக நீதிபதிகள் வழக்குகளை சமரசமாக விசாரணை செய்தனா்.

இதில், விபத்து, காசோலை, குடும்ப நலன், ஜீவனாம்சம், தொழிலாளா் பிரச்னை, மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொதுப் பயன்பாடு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தீா்வு காணப்பட்டன.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 147-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சுமாா் ரூ.4,86,36,947-க்கு தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT