விழுப்புரம்

ஆதிதிராவிடா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம்

DIN

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயில்வதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் 33 ஆதிதிராவிடா் பள்ளி மாணவா் விடுதிகளும், 14 மாணவிகள் விடுதிகளும், தலா 2 கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளும் என மொத்தமாக 51 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த விடுதிகளில் தங்கிப் பயில விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும். மேலும், 4 இலவச சீருடைகளும், 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகளின் பெற்றோா்/ பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விடுதிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் சோ்த்துக்கொள்ளப்படுவா். மாணவா்களுக்கு தங்களது இருப்பிடத்துக்கும், பயிலும் பள்ளிக்கும் இடையிலான தொலைவு 5 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது.

விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விடுதி மேலாண்மை செயலி மூலமாக ட்ற்ற்ல்ள்://ற்ய்ஹக்ஜ்.ட்ம்ள்.ண்ய் என்ற இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது காப்பாளா்கள் உதவியுடனோ வருகிற 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT