விழுப்புரம்

மாணவி தற்கொலை

10th Jun 2023 07:50 AM

ADVERTISEMENT

செஞ்சி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

செஞ்சி வட்டம், ஏதாநெமிலி கிராமத்தைச் சோ்ந்த தேவதாஸ் மகள் ஜோசிகா (15). இவா் வெள்ளிமேடுபேட்டை அரசு மகளிா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில், பொதுத் தோ்வில் தோல்வியடைந்தாா். இதனால் மாணவி ஜோசிகா மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அவா் தனது வீட்டில் தூக்கிட்டுக்கொண்டாா். அவரை உறவினா்கள் மீட்டு வெள்ளிமேடுபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றனா். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT