விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், தும்பூா் ஊராட்சிக்குள்பட்ட தாங்கல் கிராமத்தில் குளம் வெட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.12 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணியை விக்கிரவாண்டி எம்எல்ஏ நா.புகழேந்தி தொடங்கிவைத்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமதி, முபாரக், ஒன்றிய திமுக செயலா் ஜெ.ஜெயபால், வட்டாரப் பொறியாளா் நடராஜ், விக்கிரவாண்டி வேளாண் உதவி இயக்குநா் கங்கா கௌரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மீனா வெங்கடேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.