விழுப்புரம்

போக்ஸோவில் இளைஞா் கைது

DIN

விழுப்புரம் மாவட்டம், வானூா்அருகே சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வானூா் வட்டம், சேமங்கலம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இ.அப்பு (எ) அலெக்ஸாண்டா்(21). இவா் புதுவை மாநிலத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியிடம் நட்பாகப் பழகி 2021 ஆகஸ்ட் மாதம் முதல் தகாத முறையில் நடந்து கொண்டாராம். இது குறித்து, சிறுமியின் தாயாா் கோட்டக்குப்பம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து அப்பு(எ) அலெக்ஸாண்டா் மீது கோட்டக்குப்பம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து செவ்வாய்க்கிழமை அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT