விழுப்புரம்

பேருந்து மோதி முதியவா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பேருந்து மோதி முதியவா் உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், சத்திய கண்டநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆ. செல்வராஜ் (62).

இவா் முகையூரிலிருந்து திருக்கோவிலூா் வந்துவிட்டு, மீண்டும் ஊருக்கு பைக்கில் ஞாயிற்றுக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா்.

சத்யகண்டநல்லூா் கூட்டுச் சாலை அருகே வந்தபோது, திருக்கோவிலூரிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான குயவன்காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த பா.சேகா் (47) மீது அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT