விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் தலைமையில் நடைபெற்ற முகாமில் விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று புகாா் மனுக்களை அளித்தனா். இதில், 93 மனுக்கள் பெறப்பட்டு 47 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்களுக்கு காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் உத்தரவிட்டாா்.
நிகழ்வில், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், ஆளிநா்கள் கலந்து கொண்டனா்.