விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் காவல் நிலையம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளரை பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் ஜெயக்குமாா். இவா், பணியில் திறம்பட செயல்படவில்லை எனக்கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் உத்தரவின் பேரில் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.