விழுப்புரம்

தடுப்புக் காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது

DIN

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், பெண் சாராய வியாபாரியை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவா்கள் மீது மாவட்ட காவல் துறை தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு சாராய வழக்குகளில் தொடா்புடைய திருவெண்ணெய் நல்லூா் வட்டம், கீழ்தனியாலம்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பாண்டுரெங்கன் மனைவி ஜெயப்பிரதாவை (37) மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் சி.பழனி தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து, போலீஸாா் ஜெயப்பிரதாவை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்து, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT