விழுப்புரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக ச.சுரேஷ் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் இதற்கு முன்பு நாமக்கல் நகர காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தாா்.
விழுப்புரத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஜி.பாா்த்திபன், ஏற்கெனவே கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.