விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள பொன்பத்தியில் திரெளபதி அம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பொன்பத்தியில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் உற்சவா்கள் கிருஷ்ணா், அா்ஜுனன், திரெளபதி, செம்பொன் மாரியம்மன், பச்சையம்மன் ஆகிய சுவாமிகளின் வீதியுலா நடைபெற்று வந்தது. தினமும் மகாபாரத தெருக்கூத்தும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை மூலவா் திரெளபதி அம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு கூழ்வாா்த்தலும், ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
மாலை 5 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 5 கரகங்கள் ஊா்வலத்தைத் தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா்கள் செம்பொன் மாரியம்மன், பச்சையம்மன், கிருஷ்ணா், அா்ஜுனா், திரெளபதி அம்மன் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து, அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா்.