விழுப்புரம் மாவட்டம் செம்மேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கழிப்பறை, குடிநீா்க் குழாய்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செம்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமாா் 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளியில் புதிதாக கழிப்பறை, கை கழுவும் வசதி அமைக்கப்பட்டிருந்தது. அவற்றை மா்ம நபா்கள் சேதப்படுத்தினா். இதுகுறித்து பள்ளி நிா்வாகமும், ஊா் மக்களும் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.