விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே விவசாயிகளுக்கு தென்னக்கன்றுகளை சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சனிக்கிழமை வழங்கினாா்.
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், 200 விவசாயிகளுக்கு தலா இரண்டு கன்றுகள் வீதம் 400 தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், திமுக பொதுக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.