உளுந்தூா்பேட்டை அருகே உள்ள பாதூா் அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
ராயல் என்ஃபில்டு நிறுவனம் சாா்பில் நடத்தப்பட்ட முகாமுக்கு கல்லூரி முதல்வா் எஸ்.கிருபாகரன் தலைமை வகித்தாா். மேலாண் தலைவா் க.உமாமகேசுவரி முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் கே.ஆா்.செந்தில்குமாா் சிறப்புரையாற்றினாா்.
முகாமில் மேற்கூறிய தனியாா் நிறுவன மனிதவள அலுவலா்கள் பங்கேற்று 75 மாணவா்களை பணிக்கு தோ்வு செய்தனா். அவா்களுக்கு கல்லூரி தலைவா் வி.கணேசன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா். முன்னதாக துறைத் தலைவா் ஜெயராஜ் வரவேற்றாா். வேலைவாய்ப்பு அலுவலா் அலெக்சாண்டா் நன்றி கூறினாா்.