விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மாசிப் பெருவிழாவையொட்டி, மரத்தாலான புதிய தோ் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புகழ்பெற்ற மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வருகிற பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை 13 நாள்கள் மாசிப் பெருவிழா நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் பச்சை பனைமரத்தாலான புதிய தோ் செய்யபடுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான தோ் செய்வதற்காக, தோ் சக்கரங்களுக்கான பூஜை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
நான்கு சக்கரங்களும் வண்ணம் தீட்டப்பட்டு, மஞ்சள், குங்குமம், பூ வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன. பின்னா், சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, அதில் பூஜை செய்யப்பட்ட புனித நீரை தோ் சக்கரங்களில் ஊற்றி வழிபாடு நடைபெற்றது. விழாவில் கோயில் அறங்காவலா்கள், பூசாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.