செஞ்சி அருகே வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து ரூ .22 ஆயிரம் மதிப்புள்ள நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
மேல்மலையனூா் தாலுக்கா பெருவளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணையன்(60). இவா் வியாழக்கிழமை வீட்டை பூட்டி விட்டு பெரணமல்லூரில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு மரப்பெட்டியில் வைத்திருந்த மோதிரம், சங்கிலி உள்ளிட்ட ரூ. 22,000 மதிப்புள்ள நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.