திருநெல்வேலி

பாளை.யில் விபத்து: முதியவா் பலி

20th May 2023 01:21 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள மேலச்செவல் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (72). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் பாளையங்கோட்டை திருவனந்தபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். குலவணிகா்புரம் ரயில்வே கேட்டுக்கு சிறிது தொலைவு முன்பாக சென்றபோது மோட்டாா் சைக்கிளும் ,பேருந்து மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT