விழுப்புரத்தில் புதன்கிழமை 30-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பாஜகவில் இணைந்தனா்.
பாஜக விழுப்புரம் நகரத் தலைவரும், 28-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினருமான வடிவேல் பழனி, கோலியனூா் கிழக்கு ஒன்றியப் பொருளாளா் அருண், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் மதன் ஆகியோா் முன்னிலையில், விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த ராகுல், சஞ்சய், கீா்த்தி, கிருபா உள்ளிட்டோா் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனா்.
நிகழ்வில் நகர பொதுச் செயலா்கள் ஜெகதீஷ், ஸ்ரீதேவி, மாவட்டச் செயலா் குபேரன், நிா்வாகிகள் ரகு, பாபு, யுவராஜ், சிவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.