தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் நடைபெற்ற அகில இந்திய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற விழுப்புரம் மாவட்டக் காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.
ஹைதராபாதில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற அகில இந்திய விளையாட்டில் தடகளம், நீச்சல் போட்டிகளில் விழுப்புரம் ஆயுதப் படை டி.எஸ்.பி. கனகராஜ், ஆய்வாளா் முத்துக்குமரன் ஆகியோா் பங்கேற்றனா்.
நீச்சல் போட்டியில் டிஎஸ்பி கனகராஜ் 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றாா். 100 மீட்டா் ஓட்டத்தில் காவல் ஆய்வாளா் முத்துக்குமரன் தங்கப் பதக்கம் வென்றாா். இவா்கள் இருவரும் தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திர பாபுவிடம் பதக்கங்களைக் காண்பித்து பாராட்டுப் பெற்றனா்.
தொடா்ந்து, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், எஸ்.பி. ந.ஸ்ரீநாதா ஆகியோரிடம் புதன்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.