விழுப்புரம்

தனியாா் நிறுவன ஊழியா் கடலில் மூழ்கி பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் வினோத் (37). செங்கல்பட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவா், திங்கள்கிழமை பணியை முடித்து விட்டு, மரக்காணம் தீா்த்தவாரி கடற்கரைக்குச் சென்று குளித்த போது திடீரென கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, புதுச்சேரி தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT