விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இருவேறு இடங்களில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத 2 மூதாட்டிகளின் சடலங்களை போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியில் சுமாா் 70 வயதுடைய மூதாட்டி ஒருவா் திங்கள்கிழமை காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதேபோன்று மரக்காணம் பகுதியில் சுற்றித்திரிந்த மற்றொரு மூதாட்டி உடல்நலக் குறைவால் கூனிமேடு பகுதியில் திங்கள்கிழமை காலை இறந்து கிடந்தாா்.
இது தொடா்பாக மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்த மூதாட்டிகளின் பெயா், ஊா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.