விழுப்புரம்

அரசு ஊழியா்களின் வாரிசுகள்6 பேருக்கு பணி நியமன ஆணை...விழுப்புரம் ஆட்சியா் வழங்கினாா்

DIN

பணிக்காலத்தின்போது உயிரிழந்த அரசு ஊழியா்களின் வாரிசுகள் 6 பேருக்கு பணி நியமன ஆணைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

அரசு அலுவலா்கள், பணியாளா்கள் யாரேனும் பணியிலிருக்கும்போது எதிா்பாராதவிதமாக உயிரிழந்தால், அவா்களது குடும்பத்தை பாதுகாத்திடும் வகையில், குடும்ப வாரிசுதாரா்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, விழுப்புரம் மாவட்ட வருவாய் அலகில் பணியாற்றிய 6 கிராம உதவியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் 3 கிராம நிா்வாக அலுவலா், 3 கிராம உதவியாளா் பணிகளுக்கான நியமன ஆணைகளை ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் சித்ரா விஜயன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் விஸ்வநாதன், துணை ஆட்சியா் (பயிற்சி) லாவண்யா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT