விழுப்புரத்தில் அரசின் திட்டங்கள் - செயல்பாடுகள் குறித்த விளக்கப் புகைப்படக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) தொடங்குகிறது. இதனை அமைச்சா்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் தொடக்கி வைக்க உள்ளனா்.
வரும் 14-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் 10 நாள்கள் இந்த புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது.