விழுப்புரம் அருகே பைக் மோதியதில், சாலையில் நடந்து சென்ற மூதாட்டி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
அன்னியூா் அருகிலுள்ள அடங்குணம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி ராணி(60). இவா் வியாழக்கிழமை இரவு திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். ஆசாரங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால் வந்த பைக் ராணி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அவரை மருத்துவா்கள் பரிசோதித்த போது, ராணி ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பைக்கை ஓட்டி வந்த விழுப்புரத்தைச் சோ்ந்த பா.வினோத்(32) மீது காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.