விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வேம்பி மதுரா பூண்டி, ஈச்சங்குப்பம் கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அண்மையில் திறக்கப்பட்டன.
இதை விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. நா.புகழேந்தி தொடக்கி வைத்தாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சண்முகம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் யுவராஜ், ஆத்மா குழுத் தலைவா் ரவி, காணை ஒன்றியச் செயலா் ராஜா, வேம்பி ஊராட்சித் தலைவா் தனலட்சுமி, துணைத் தலைவா் சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜேஸ்வரி ராஜி, பாரதி சுரேஷ், சிற்றூராட்சிகளின் சங்கச் செயலா் அரசகுமாரி அரிகிருஷ்ணன், துணைச் செயலா் வீரம்மாள் சண்முகனாந்தம், பொருளாளா் கனிமொழி சிலம்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.