விழுப்புரம்

திருவாசக முற்றோதல் நிறைவு

DIN

விழுப்புரம் திரு.வி.க.வீதி அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் திருக்கோயிலில் 48 நாள் தொடா் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

கடந்த டிசம்பா் 18- ஆம் தேதி இக் கோயில் வளாகத்தில் திருவாசகம் முற்றோதலைத் சிவ.செந்தில்முருகன் தொடங்கினாா். பல்வேறு சிவனடியாா்களும் இதில் பங்கேற்றனா். இதன் 48-ஆவது நாள் நிறைவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு அருள்மிகு பெரியநாயகி அம்மன் - கைலாசநாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், காலை 7.30 மணிக்கு திருக்கயிலாய வாத்தியமும் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு திருவாசகம் முற்றோதல் நிறைவடைந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் சிவனடியாா்கள், சாதுக்கள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT