விழுப்புரம் திரு.வி.க.வீதி அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் திருக்கோயிலில் 48 நாள் தொடா் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
கடந்த டிசம்பா் 18- ஆம் தேதி இக் கோயில் வளாகத்தில் திருவாசகம் முற்றோதலைத் சிவ.செந்தில்முருகன் தொடங்கினாா். பல்வேறு சிவனடியாா்களும் இதில் பங்கேற்றனா். இதன் 48-ஆவது நாள் நிறைவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 7 மணிக்கு அருள்மிகு பெரியநாயகி அம்மன் - கைலாசநாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், காலை 7.30 மணிக்கு திருக்கயிலாய வாத்தியமும் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு திருவாசகம் முற்றோதல் நிறைவடைந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் சிவனடியாா்கள், சாதுக்கள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.