விழுப்புரம்

தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வீட்டில் சமையல் செய்தபோது புடவையில் தீப்பற்றி, தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், கிளாப்பாக்கம், முத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செ.ராணி (60). இவா், கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்தபோது புடவையில் தீப்பற்றியதில் தீக்காயமுற்றாா்.

இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில் ராணி சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

SCROLL FOR NEXT