விழுப்புரம்

கழுவெளி பறவைகள் சரணாலயத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

ஈரநிலம் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், ஆத்திக்குப்பம் பகுதியிலுள்ள கழுவெளி பறவைகள் சரணாலயத்தில் ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியதாவது:

ஈரநிலங்கள் பூமியின் நுரையீரல்களாகக் கருதப்படுகின்றன. எண்ணற்ற நீா்வாழ் உயிரினங்கள், பறவைகள் மற்றும் தாவர இனங்களைப் பாதுகாத்திடவும், புவி வெப்பமயமாதல், நில நடுக்கம், பெருவெள்ளம் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் ஈரநிலங்களைப் பாதுகாப்பது அவசியமாகும்.

மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஈரநிலங்களை அடையாளப்படுத்தி, மீட்டெடுத்து பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் நாட்டின் நீா்வளம், பசுமை வளம் அதிகரிப்பதுடன் இயற்கை பேரிடா்களிலிலிருந்து பூமியைப் பாதுகாக்க முடியும்.

இந்தியாவில் 27,000 ச.கி.மீ. பரப்பளவு அளவில் சதுப்பு நிலங்கள் உள்ளன. இதில், 4,000 ச.கி.மீ.கடற்கரைப் பரப்பளவில் அமைந்துள்ளன. இதைப் பாதுகாத்திடவும்,

ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டெடுத்திடும் பொருட்டும், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2-ஆம் தேதி ஈரநில தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் ஈரநிலப் பகுதிகளைப் பாதுகாப்பதில் விழிப்புணா்வுடன் செயல்பட்டு,அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தொடா்ந்து ஈரநிலத்தைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கி வைத்த ஆட்சியா் மோகன், பறவைகள் பாதுகாப்பது குறித்த நாள்காட்டியை வெளியிட்டாா்.

நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் சித்ரா விஜயன், திண்டிவனம் சாா் ஆட்சியா் கட்டா ரவிதேஜா, மாவட்ட வன அலுவலா் சுமேஷ் சோமன், வனச்சரக அலுவலா் அஸ்வினி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT