இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மனைப்பட்டா அளவீடு மற்றும் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்தவா்களின், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த குருதேவன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலாளா் என்.ஆா்.பாலமுருகன், மாவட்டத் தலைவா் மகாதேவன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.