விழுப்புரம்

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு:விசாரணை மே 4-க்கு ஒத்திவைப்பு

26th Apr 2023 06:52 AM

ADVERTISEMENT

விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை மே 4- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யைத் தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்.பி. ஆகிய இருவரும் ஆஜராகினா். அப்போது, முன்னாள் எஸ்.பி. சாட்சியாக மாறி, வழக்கு விசாரணை குறித்து சாட்சியமளித்தாா்.

அவரிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி, அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் குறுக்கு விசாரணை நட த்தினா். மேலும், முன்னாள் எஸ்.பி.யின் சாட்சிகளிடம் விசாரணை நடத்த ஏதுவாக, வழக்கு விசாரணையை மே 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி எம்.புஷ்பராணி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT