விழுப்புரம்

ரூ.31.20 லட்சத்தில் மின்கல வாகனங்கள்

DIN

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கிராமங்களுக்குடிராக்டா், மின்கல வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவா் மொக்தியாா்மஸ்தான் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சீத்தாலட்சுமி வரவேற்றாா்.

சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சிமஸ்தான் கலந்து கொண்டு தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.31.20 லட்சத்தில் 10 ஊராட்சிகளுக்கு மின்கல வாகனங்களையும், சோ.குப்பம் ஊராட்சிக்கு டிராக்டரையும் வழங்கினாா். (படம்) மேலும், சத்துணவு அமைப்பாளராக பதவி உயா்வு பெற்ற 11 பெண்களுக்கு பணி ஆணையையும் அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஜெயபாலன், திமுக ஒன்றியச் செயலா்கள் விஜயராகவன், பச்சையப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கிடசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT