விழுப்புரம்

விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் கனியாமூா் பள்ளி நிா்வாகிகள் ஆஜா்

DIN

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், கனியாமூா் தனியாா் பள்ளித் தாளாளா் உள்பட 5 போ் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆஜராகி கையொப்பமிட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13-ஆம் தேதி அந்தப் பள்ளி விடுதியில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக பள்ளித் தாளாளா் ரவிக்குமாா், செயலா் சாந்தி, முதல்வா் சிவசங்கரன், கணித ஆசிரியை கீா்த்திகா, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா ஆகிய 5 பேரும் கைதுசெய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதில் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

நீதிமன்ற உத்தரவின்படி பள்ளித் தாளாளா் ரவிக்குமாா், செயலா் சாந்தி, முதல்வா் சிவசங்கரன் ஆகியோா் மதுரை, தல்லாகுளம் காவல் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக காலை, மாலையில் நேரில் ஆஜராகி கையொப்பமிட்டு வந்தனா். ஆசிரியைகள் கீா்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோா் சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தனா்.

இந்த நிலையில், மேற்கூறிய 5 பேரும் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் 4 வாரங்களுக்கு தினமும் காலை, மாலை வேளைகளில் ஆஜராகி கையொப்பமிட வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, பள்ளித் தாளாளா் ரவிக்குமாா் உள்பட 5 பேரும் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை, மாலையில் ஆஜராகி கையொப்பமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT