விழுப்புரம்

தென்னை நாா் தொழில் பயிற்சி

DIN

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தென்னை நாா், அதன் சாா்பு தொழில் புரிவோருக்கான 3 நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மனித வள மேம்பாட்டுத் திட்டம், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை, பொள்ளாச்சி மண்டல கயிறு வாரியம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். பொள்ளாச்சி கயிறு வாரிய ஆய்வாளா் வித்யாதரன் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, வெங்கடசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் பயிற்சி முகாமை தொடக்கிவைத்து பேசினாா்.

மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் தாமோதரன், சத்தியமங்கலம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை மேலாளா் விஜயகுமாா், ‘திருவண்ணாமலை ஏழ்மை போக்கும்’ சமூக அமைப்பின் செயலா் சங்கா், சோ.குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT