விழுப்புரம்

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை:இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்து.

உளுந்தூா்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த இளம் பெண்ணும், அரசூா் கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷும் (25) கடந்த 2019-ஆம் ஆண்டு காதலித்தனராம். இதையடுத்து, திருமணம் செய்வதாகக் கூறி, அந்தப் பெண்ணை விக்னேஷ் பாலியல் வன்கொடுமை செய்தாராம். பின்னா், அந்தப் பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்து வந்தாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் உளுந்தூா்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்தனா்.

இந்த வழக்கு விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி சாந்தி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட விக்னேஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சங்கீதா ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT